லட்சுமி நரசிம்ம ஹோமம்

லட்சுமி நரசிம்ம ஹோமம்

திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்கிற ஒரு பழமொழி உண்டு. வாழ்வில் தொடர்ந்து ஏற்படும் கஷ்டங்கள், துயரங்கள் ஏற்பட்டு நொந்து போன மனிதர்களுக்கு சக மனிதர்களைக் காட்டிலும் தெய்வங்களின் அருள் நிச்சயம் உதவுவதாக அனுபவம் வாய்ந்தவர்களின் கருத்தாக இருக்கிறது. அப்படி தன் பக்தருக்கு துன்பம் ஏற்பட்ட காலத்தில் அழைத்தவுடன் உடனே தோன்றி, அந்த பக்தனின் துயரை போக்கிய ஒரு புராண நிகழ்வாக மகாவிஷ்ணுவின் நரசிம்மர் அவதாரம் திகழ்கிறது. காக்கும் கடவுளான அந்த நரசிம்மருக்குரிய “லட்சுமி நரசிம்மர் ஹோமம்” செய்வதால் நமக்கு ஏற்படும் மிக அற்புதமான பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

 

இந்த லட்சுமி நரசிம்ம ஹோமம் செய்யும் போது லட்சுமி நரசிம்மருக்கு தாமரை பூக்கள் சமர்ப்பித்து, வெல்லம் கொண்டு செய்யப்படும் பானகம் நைவேத்தியமாக வைக்க வேண்டும். ஹோம பூஜை முடிந்த பிறகு இறைவனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட நைவேத்தியப் பொருட்கள் மற்றும் ஹோம குண்டத்தில் இடப்பட்ட பொருட்களின் புனித அஸ்தி போன்றவை பிரசாதமாக நமக்கு தரப்படுகிறது. பூஜையறையில் வைத்து தினமும் நாம் வழிபடுவதும், அந்த சாம்பலில் தினமும் சிறிது எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்வதும் நம்முடைய தோஷங்களை போக்குகிறது. பிரசாதமான பானகத்தை ஹோமம் பூஜை செய்தவர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அருந்த வேண்டும்.

லட்சுமி நரசிம்ம ஹோமத்தை செய்து கொள்வதால் தம்பதிகள் மற்றும் பிற உறவினர்களுடன் ஏற்பட்டிருக்கின்ற கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். காரியங்களில் தடை, தாமதங்கள் இல்லாமல் அனைத்திலும் சிறப்பான வெற்றிகளை பெற முடியும். சொந்த வீடு, வாகனம் மற்றும் மிகுதியான செல்வச் சேர்க்கை போன்ற பாக்கியங்களை தரும். வசிக்கின்ற வீடுகளில் ஏற்பட்டிருந்த துஷ்ட சக்தி பாதிப்புகள், மாந்திரிக ஏவல்கள் போன்றவற்றின் தீய அதிர்வுகள் முற்றிலும் நீங்கி நன்மையான பலன்கள் உண்டாகும். தொழில், வியாபாரங்களில் நேரடி மற்றும் மறைமுக எதிரிகள் ஒழிவார்கள். எப்படிப்பட்ட தீர்க்கமுடியாத கடன் பிரச்சனையும் விரைவில் தீருவதற்கான வழிகள் கிடைக்கும்.

விரைவு இணைப்புகள்

முகப்பு
பண்டிட்
பூஜை சேவைகள்
புகைப்பட தொகுப்பு
சான்றுகள்
எங்களை தொடர்பு கொள்ள

தொடர்பு கொள்ளுங்கள்

+91 93440 05881
சென்னை – 600030
தமிழ்நாடு

ஒரு சிறு குறிப்பு

வேத சடங்குகள், மத சடங்குகள், வாஸ்து யாகங்கள் மற்றும் இது போன்ற பல வேத மற்றும் இந்து பூஜை சேவைகளைப் பெறுவதற்கு யஜனம் வலைத்தளத்தில் முன்பதிவு செய்து, அனைத்து வித சம்ஹ்காரங்களும் வேத முறைப்படி சிறப்பாக செய்ய அணுகவும்.